Wednesday 15 February 2012

குடவாசல் ஸ்ரீநிவாச பெருமாள்

பொங்கல் விடுப்பில் நான் ஊரில் இருந்த சமயம் எனது குடும்பத்துடன் எங்கள் நட்பு வட்டம் சூழ கும்பகோணம் சுற்றி உள்ள கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த நட்பு வட்டம் ஒவ்வொரு வருடமும் தை அமாவாசை அன்று இது போல் செல்வது வழக்கம். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பார்த்திராத கோவில்கள் என்று செல்வார்கள். இந்த முறை அப்படி செல்லுகையில் மிகவும் ஆச்சிர்யமான பல கோவில்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு கோவில்களுக்கு என்று தல புராணம் என்று அக்கோவில் அமைந்த விதம் பற்றி கதை கூறுவது உண்டு. அப்படி ஒவ்வொரு கோவில்களுக்கும் ஒரு தல புராணம் இருந்தாலும் பெரும்பான்மையான கோவில்களின் அமைப்பு அல்லது வாசல் ஒன்று போல இருக்கும். பெரிய வித்தியாசம் எதுவும் இருக்காது.
ஆனால் அன்று சென்ற எட்டு கோவில்களில் ஒரு கோவில் மற்ற கோவில்களில் இருந்து அமைப்பில் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. அந்த கோவில் கும்பகோணம் அருகே குடவாசல் என்ற ஊரில் இருந்த ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் ஆகும். இதன் சிறப்பு என்ன என்றால் அந்த கோவிலில் எம்பெருமான் அந்த திருப்பதி வெங்கடாசலபதியின் இளைய சகோதரர் என்கிற சம்பரதாயதோடு திருப்பதியை பார்த்தவாறு வடக்கு நோக்கி வீற்றிருப்பார். இந்த பூலோகத்தில் எந்த ஒரு பெருமாள் கோவிலும் இப்படி வடக்கு திசை நோக்கி எம்பெருமான் காட்சி தரமாட்டார், இந்த ஒரு கோவிலை தவிர. நாங்கள் கோவில் மாலை 4 மணிக்கு திறப்பதற்கு முன்பே அங்கு சென்று சேர்ந்தோம். கோவிலை திறக்க வந்த அர்ச்சகர் எங்கள் கூட்டத்தை பார்த்து மகிழ்ந்து எங்களுக்கு மிகவும் பொறுமையாக இந்த கோவிலின் சிறப்பை கூறிக்கொண்டு இருந்தார். அப்படி அவர் கூறிய போது அவரின் அந்த முகத்தில் ஒரு பக்தி பரவசத்தை பார்க்க வேண்டுமே... ஆஹா என்ன ஒரு மகிழ்ச்சி, என்ன ஒரு களிப்பு. பக்தர்கள் சேவையை அந்த பெருமாளுக்கு செய்யும் சேவையை நினைக்கும் ஒரு சில அர்ச்சகார்களில் அவரும் ஒருவர் எனது மனதில் பட்டார். அப்படி பட்ட உண்மையான கடவுள் ஊழியர்களுக்காக இதுவும் எனது அடுத்த பதிவும் சமர்ப்பணம்.

No comments:

Post a Comment