Friday 30 December 2011

நெஞ்சம் மறப்பதில்லை....

தங்களின் சாதனைகளாலும், ஆளுமை திறனாலும், கொள்கையாலும், அறிவாலும் மக்களை கவர்ந்தவர்கள் எத்தனையோ பேர்கள் இருக்கின்றனர். சிலர் அறிவு ஜீவிகளாகவும், சிலர் தலைவர்களாகவும் இருந்துள்ளனர். சிலரிடம் இருந்து நாம் நன்மை பயக்கும் விடயங்களை (விஷயங்களை......தூய தமிழ் வார்த்தை உபயம் - கலசம் வானொலி) கற்றுள்ளோம். சிலரை பார்த்து நாம் எவ்வாறு இருக்க கூடாது என தெரிந்து உள்ளோம். சிலரை பார்த்து வணங்கியும் உள்ளோம்.

அவர்களுள் சிலர் நம் மனம் கவர்ந்த கதா நாயகர்களாகவும் (Heros) மற்ற சிலர் எதிர் மறை கதா நாயகர்களாகவும் (Anti-Heros) இருந்துள்ளனர். அப்படி பட்ட அந்த ஒரு சிலர் இன்று நம்மோடு இல்லை. 2011-ஐ போகிற போக்கில் நாம் வழி அனுப்பும் பொழுது இவர்களும் நம்மிடம் இருந்து விடை பெற்றவர்கள். அவர்களை சற்றேனும் நினைத்துப் பார்க்க இந்த வலைப் பதிவு.

நன்றி.

                
                 

No comments:

Post a Comment